நவராத்திரி


அகில உலகத்தின் அனைத்துமாக அம்பிகையே விளங்குகிறாள் என்பதை உணர்த்தும் வகையிலும், முப்பெருந்தேவியரையும் ஒன்று சேரப் போற்றும் ஒப்பற்ற விழாவாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. 'நவம்' என்ற சொல்லுக்கு ஒன்பது என்று அர்த்தம். பெரும்பாலான கோவில்களில் இந்த ஒன்பது நவகிரகங்கள் அருள்பாளிக்கும். இந்ஜோதிட நூலின்படி கோள்கள் ஒன்பது ஆகும். இவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்பனவாகும். இவையும் இந்த நன்நாளில் சிறப்பு பெருகின்றன. 

புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் தொடங்கி ஒன்பது நாட்கள் வரையில் நவராத்திரியாக அனைவரும் கொண்டாடுகிறார்கள். பத்தாவது நாள் விஜயதசமி நாளையும் இணைத்து மொத்தம் பத்து நாட்கள் நவராத்திரி விழா முடியும். 

இவ்­வி­ழா­வா­னது ஆல­யங்­களில் சமய வைப­வ­மாக மட்­டு­மல்­லாமல் இல்­லங்கள், பொது மன்­றங்கள், பாட­சா­லைகள், அலு­வ­ல­கங்கள், வேலைத்­த­ளங்கள் என எல்லா இடங்­க­ளிலும் சரஸ்­வதி பூஜை என்றும் கலை­விழா என்றும் காலங்­கா­ல­மாகக் கொண்­டா­டப்­பட்டு வரு­கின்­றது.
இவ்­வாறு பல­வி­தத்­திலும் சிறப்பு பெற்ற நவ­ராத்­திரி விரத ஆரம்பம் எப்­போது என்­பதில் இரு பஞ்­சாங்­கங்­க­ளி­டையே குழப்பம் நில­வு­வதால் மக்­க­ளுக்கு ஆதா­ர­பூர்­வ­மாக சரி­யான தினத்தை தெரி­விக்க வேண்­டிய கடப்­பாடு உண்டு.
அதா­வது திருக்­க­ணித பஞ்­சாங்கப் பிர­காரம் 21-.09-.2017 வியா­ழக்­கி­ழமை எனவும் வாக்­கிய பஞ்­சாங்­கப்­படி 20.-09-.2017 புதன்­கி­ழமை எனவும் குறிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறிக்கையில் 21- 09 - 2017 வியாழக்கிழமை என குறிப்பிடபட்டுள்ளது.



Comments

Post a Comment

Popular posts from this blog

சிறுவர் உரிமைகள்

சமய விழுமியங்கள். (இந்து சமயம்)

தியானம் என்பது